internet

img

சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் பணிகளில் ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக் நிறுவனம், க்ரிப்டோகரென்சி சார்ந்த பணப்பரிமாற்றங்களை செய்ய தனக்கென சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து ’தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ அறிக்கையில் வெளியாகியிருக்கும் தகவலின்படி, சொந்தமாக பிட்காயின் உருவாக்குவதற்கென ஃபேஸ்புக் நிறுவனம் பல்வேறு நிதி நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் வணிகர்களை பணியமர்த்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

க்ரிப்டோகரென்சி சார்ந்த பேமண்ட் முறையை கொண்டு மின்னணு பணமான பிட்காயினுக்கு இணையான டிஜிட்டல் காயின்களை பணப்பரிமாற்றங்களுக்கு பயன்படுத்த உள்ளது. ஃபேஸ்புக், தொழில்நுட்பத்தின் சக்தியை முடிந்தளவு அதிகமாக பயன்படுத்திக் கொள்ளும் வழிகளை கண்டறிந்து வருவதாக கூறப்படுகிறது. 

முன்னதாக ஃபேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சூக்கர்பர்க் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் தனக்கு விருப்பம் இருப்பதாகவே தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது "மீண்டும் பிளாக்செயின் ஆத்தன்டிகேஷன் வழங்குவது பற்றி சிந்தித்து வருகிறேன். இதை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பது பற்றி இதுவரை எவ்வித திட்டமும் இல்லை. எனினும், இதன்மூலம் பல்வேறு சேவைகளை இயக்குவதற்கான வசதியை வழங்க முடியும்" என சூக்கர்பர்க் தெரிவித்தார்.